குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குரங்கணில்முட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்குரங்கணில்முட்டம்
பெயர்:திருக்குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தூசி அருகில்
மாவட்டம்:திருவண்ணாமலை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வாலீசுவரர், கொய்யாமலை நாதர்
தாயார்:இறையார்வளையம்மை
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:காக்கை மடு(குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

அமைவிடம்[தொகு]

இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும்.

வழிபட்டோர்[தொகு]

வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும் எமன் முட்டம் (காகம்) வடிவிலும் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்[தொகு]