திரவ உந்துகை அமைப்பு மையம்
திரவ உந்துகை அமைப்பு மையம் (Liquid Propulsion Systems Centre) இந்திய விண்வெளித்துறையின் கீழ் வருகின்ற ஒரு தனித்து இயங்கும் ஓர் மையமாகும். இதன் தலைமையிடம் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா ஆகும். இதன் கிளைகள் தமிழ் நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மகேந்திரகிரியிலும், பெங்களூருவிலும் அமைந்துள்ளன. இம் மையத்தில் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட் இன்ஜின்கள் வடிவமைக்கப்படுகின்றன.
பொருளடக்கம் |
வலியமலா [தொகு]
இது இம்மையத்தின் தலைமையகமாக விளங்குகின்றது. இங்கு திரவ இனஜின்களின் வடிவமைப்பு, மற்றும் ஆராய்ச்சி நடைபெறுகிறது. இங்கு சுமார் 800 பேர் வேலைப் பார்க்கிறார்கள்.
மகேந்திர கிரி [தொகு]
தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு 600 பேர் நிரந்தரமாகவும் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். திரவ ராக்கெட் உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்து தகுதிப்படுத்துதல் ஆகிய பணிகள் இங்கு நடைப்பெற்று வருகின்றன.
பெங்களூரு [தொகு]
செயற்கைக்கோள்களுக்கான சிறிய உந்து இஞ்ஜின்கள் இங்கே செயல்வடிவம் பெறுகின்றன.