திடம்பு நிருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திடம்பு நிருதம்

திடம்பு நிருதம் (Thidambu Nritham) (திடம்பு - கடவுள் சிலை; நிருதம் - நாட்டியம்) என்பது இந்தியாவின் கேரள ‌மாநிலத்தில் வடக்கு மலபார் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் நம்பூதிரிப் பிராமணர்களால் ஆடப்படும் ஒரு வகை பாரம்பரிய நடனம். தலையில் வழிபாட்டுக் கடவுளின் சிலையை வைத்துக் கொண்டு ஆடப்படுவது இந்நடனத்தின் குறிப்பிடத்தக்க ஆகும்.

பொதுவாக இந்த நடனத்தைப் பதின்மர் ஆடுவர். தலையில் வைத்திருக்கும் கடவுள் சிலை அவசியம் அலங்கரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திடம்பு_நிருதம்&oldid=2094232" இலிருந்து மீள்விக்கப்பட்டது