தாமரைக் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொழும்பு தாமரைக் கோபுரம் | |
|---|---|
கட்டி முடிக்கப்பட்டபின்னர் கோபுரத்தின் தோற்றம் இவ்வாறு அமையலாம் என்று எதிர்வு கூறும் கணனி. |
|
| பொதுவான தகவல்கள் | |
| வகை | கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, வணிக ரீதியான பாவனை |
| அமைவிடம் | கொழும்பு, இலங்கை |
தாமரைக் கோபுரம் எனப்படுவது தற்போது இலங்கையில் அமைக்கப்பட்டுவரும் ஒரு கோபுரமாகும். இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக இது அமையும் என்று கணிக்கப்படுகின்றது. [1]
இந்தக் கோபுரக் கட்டுமாணப் பணிகளிற்கான பண உதவித் தொகையான 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக சீன வங்கியான எக்சிம் வங்கி வழங்கியுள்ளது. இந்தக் கோபுரத்தின் கட்டுமாணப் பணிகள் சுமார் 30 மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இக் கோபுரம் கொழும்பின் புற நகர் பகுதியான பாலியகொடையில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் பின்னர் டிசம்பர், 2011 இல் அமைச்சரவை முடிவுக்கு இணங்க கொழும்பு நகரின் மையத்தில் இக்கோபுரத்தை அமைப்பதாக முடிவாகியது.[2].