தற்புருடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்புருடம் என்பது சிவபெருமானின் மறைத்தல் பணிபுரியும் முகமாகக் கருதப்பெறுகிறது.

சிவத்தோற்றம்[தொகு]

சிவபெருமானை படைப்பின் கடவுளான பிரம்ம தேவர் பீதகற்பத்தில் தியானித்தார். அப்பொழுது சிவபெருமான் தன்னுடைய கரிய சடாமுடியில் இளம்பிறை அணிந்தவாறு காட்சியளித்தார். இந்த உருவம் தர்புருடமாகும். இத்தோற்றம் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம் விளக்கியுள்ளது. [1]

சிவமுகம்[தொகு]

சிவபெருமானின் ஐந்து முகங்களில் நான்காவது முகமாகவும் தற்புருடம் அறியப்படுகிறது. இம்முகம் மஞ்சள் குங்கும நிறமுடையதெனவும், கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக திரிபுர தாண்டவம் ஆடி மறைத்தல் பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் காற்றின் தன்மையுடையதாக் இம்முகம் அறியப்படுகிறது.

சிவபெருமான் தற்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். [2]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10974 இலிங்க புராணம் - தினமலர் கோயில்கள் தளம்
  2. http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php பரணிடப்பட்டது 2013-05-07 at the வந்தவழி இயந்திரம் ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்புருடம்&oldid=3215669" இலிருந்து மீள்விக்கப்பட்டது