தமிழ்க் கணிமைக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] 1984
- ஸ்ரீநிவாசன் ஆதமி மென்பொருளை உருவாக்குகிறார்.
[தொகு] 1986
- முத்து நெடுமாறன் முரசு மென்பொருளை உருவாக்குகிறார்.
[தொகு] 1988
- இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.
[தொகு] 1990
- சிவகுருநாதன் சின்னையா நளினம் மென்பொருளை வெளியிடுகிறார்.
[தொகு] 1993
- கே. கல்யாணசுந்தரம் மயிலை எழுத்துருவினை உருவாக்குகிறார்.
[தொகு] 1994
- தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.
[தொகு] 1995
- பாலா பிள்ளை tamil.net வலைத்தளத்தையும் மடற்குழுவையும் உருவாக்குகிறார்.
[தொகு] அக்டோபர்
- நா. கோவிந்தசாமி முதல் தமிழ் இணையத்தளத்தை வலையேற்றுகிறார்.[மேற்கோள் தேவை]
[தொகு] 1997
[தொகு] செப்டெம்பர்
- தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறையின் முதல் வெளியீடு இடம்பெறுகிறது.
[தொகு] 1998
[தொகு] ஜனவரி
- தைப்பொங்கல் நாளன்று மதுரைத் திட்டம் தொடங்குகிறது.
[தொகு] 1999
- சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தரப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைப்பலகை வடிவம் அறிவிக்கப்படுகிறது
[தொகு] நவம்பர்
- மணவை முஸ்தபா கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதியை வெளியிடுகிறார்.
[தொகு] 2000
- தமிழ் நாடு, இலங்கை அறிஞர்களின் கூட்டுழைப்பில் இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களம் தகவல் தொழில் நுட்ப கலைச்சொல் அகரமுதலியினை சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் இணையம் 2000 மாநாட்டில் சமர்ப்பிக்கிறது.
- அழகி மென்பொருள் வெளியிடப்படுகிறது.
- மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 2000 இயங்குதளம் தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவளித்தும், தமிழைத் தேர்வு மொழியாகப்பயன்படுத்தக்கூடிய மிக அடிப்படையான வசதிகளுடனும் வெளிவருகிறது
[தொகு] யூலை
[தொகு] அக்டோபர்
- அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).
[தொகு] 2001
[தொகு] பெப்ரவரி
- பெப்ரவரி 17ம் நாள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்குகிறது.
[தொகு] 2002
- வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [2]
- மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட க்னூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.
[தொகு] ஏப்ரல்
- ஏப்ரல் 20 ராயர் காப்பி கிளப் யாஹூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது
[தொகு] ஆகஸ்ட்
- ஆகஸ்ட் 6 இல் நொப்பிக்ஸ் இனை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வசீகரன் தமிழினிக்ஸ் குழுமத்துக்கு அறிவிக்கிறார் [3]
[தொகு] 2003
[தொகு] ஜனவரி
- தமிழில் வலைப்பதிவுக் கலாசாரம் ஆரம்பிக்கிறது (முதல் வலைப்பதிவினை கார்த்திகேயன் இராமசுவாமி ஜனவரி 1ம் நாள் எழுதுகிறார்) [4]
[தொகு] பெப்ரவரி
- பெப்ரவரி 21 இல் மரத்தடி யாஹூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.
[தொகு] மே
- மே 27ம் நாள் சுரதா யாழ்வாணன் தமிழின் எந்தவொரு எழுத்துருவையும் இணையத்தில் இணைப்பிலிருந்தபடியே ஒருங்குறிக்கு மாற்றித்தரத்தக்க பொங்குதமிழ் செயலி யினை வலையேற்றுகிறார்.
[தொகு] 2004
[தொகு] பெப்ரவரி
[தொகு] மே
- மே 15ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தமிழ் சமுதாயக் கலைச்சொல்லகராதித் திட்டம் ஆரம்பிக்கிறது. மாலன் இதற்கு மட்டுறுத்துநராக பணியாற்றுகிறார்.[6]
[தொகு] 2005
[தொகு] ஜனவரி
- நகர்பேசிகளில் தமிழ்க் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு உதவும் செல்லினம் மென்பொருளை முத்து நெடுமாறன் வெளியிடுகிறார்.
[தொகு] ஏப்ரல்
- ஏப்ரல் 20ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முதன்முறையாக தனது இயக்குதளம் ஒன்றிற்கான இடைமுகப்பினை தமிழ்ப்படுத்தும் வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி யினை வெளியிடுகிறது.
- ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் Mac OS X v10.4 (Tiger) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.
[தொகு] 2008
[தொகு] மே
- மே 18ம் நாள் ட்டொரான்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியப் பூங்கா அமைப்பினால் 2008ம் ஆண்டின் தமிழ்த் தகவற் தொழிநுட்பத்துக்கான சுந்தரராமசாமி விருது கே. கல்யாணசுந்தரத்துக்கு வழங்கப்படுகிறது.