டி. பி. பூனாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. பி. பூனாட்சி (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் நெய்வேலி எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது அ.இ.அ.தி.மு.கவில் திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.[1][2]

குடும்பம்[தொகு]

இவருக்கு பாலம்மாள் என்கிற மனைவியும், பிரபாகர், அருண்குமார் ஆகிய இரண்டு மகன்கள், ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்". தினகரன். Archived from the original on 2013-02-28. பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._பூனாட்சி&oldid=3930528" இலிருந்து மீள்விக்கப்பட்டது