ஜியார்ஜ் பெர்க்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியார்ஜ் பெர்க்லி
George Berkeley
பிறப்பு(1685-03-12)12 மார்ச்சு 1685
கில்கென்னி, அயர்லாந்து
இறப்பு14 சனவரி 1753(1753-01-14) (அகவை 67)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
காலம்அறிவொளிக் காலம்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஇலட்சியவாதம், புலனறிவாதம்
முக்கிய ஆர்வங்கள்
கிறித்தவம், மீவியற்பியல், அறிவாய்வியல், மொழியியல், கணிதம், உள்ளுணர்வு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
அகநிலை இலட்சியவாதம், master argument

ஜியார்ஜ் பெர்க்லி (George Berkeley, ஜோர்ஜ் பேர்க்லி[1] 12 மார்ச் 1685 - 14 சனவரி 1753), என்பவர் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மெய்யறிவாளர் ஆவார். இவரை பிஷொப் பெர்க்லி என்றும் அழைப்பர். இவர் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டுக்கு எதிர்மறையான எதிர் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டை முன் வைத்தவர். இவரின் கோட்பாட்டின் படி, "உலகத்தில் நாம் காணும் பொருள் யாவும் ஒரு வகை மாயையே, அவை உண்மையில் இருப்பதில்லை. அவை நம் மனத்தில் தான் இருக்கின்றன. எனவே, அவை உண்மையிலேயே இருப்பது போலத் தென்படுகின்றன" என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வாட்சன், ரிச்சார்ட் ஏ. (1993–94). "Berkeley Is Pronounced Barclay". Berkeley Newsletter (13): 1–3. http://people.hsc.edu/berkeleystudies/past_issues_pdf/no13-1993-94.pdf. பார்த்த நாள்: 8 நவம்பர் 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியார்ஜ்_பெர்க்லி&oldid=3213934" இலிருந்து மீள்விக்கப்பட்டது