சென் புத்தமதம்
| நாடுகள் |
| இந்தியா • சீனா • சப்பான் கொரியா • வியட்நாம் தாய்வான் • மங்கோலியா திபேத்து • பூட்டான் • நேபாளம் |
| கொள்கை |
| போதிசத்வர் • Upāya Samādhi • Prajñā Śunyatā • Trikāya |
| மகாயான சூத்திரங்கள் |
| Prajñāpāramitā Sūtras தாமரை சூத்திரம் நிர்வாண சூத்திரம் Saṃdhinirmocana Sūtra Avataṃsaka Sūtra Laṅkāvatāra Sūtra |
| மகாயானப் பிரிவுகள் |
| மத்தியமகம் யோகாசாரம் Esoteric Buddhism தூய நிலம் • சென் தியாந்தாய் • நிச்சிரென் |
| வரலாறு |
| பட்டுப்பாதை • நாகார்ச்சுனர் அசங்கர் • வசுபந்து போதிதர்மர் |
| Portal |
சென் புத்தமதம் மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சென் புத்தமதம் அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அநுபவ அறிவை முதன்மைப்படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சென் புத்தமதம் சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தருமன் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காக சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது. சென் புத்தமதம், ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. சீனாவிலிருந்து சென் புத்தமதம், தெற்கே வியட்நாமுக்கும், கிழக்கே கொரியாவுக்கும் சப்பானுக்கும் பரவியது.