சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து, 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன. மேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.
| சென்னை எழும்பூர் | |||
|---|---|---|---|
| வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: பூங்கா நகர் |
தென்மேற்கு வழி, சென்னைப் புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: சேத்துப்பட்டு |
|
| நிறுத்த எண்: 4 | கிமீ தொடக்கத்திலிருந்து: 4.32 | ||
| தென்மேற்கு வழித்தடத்தில் உள்ள இரயில் நிலையங்கள் |
|---|
| சென்னைக் கடற்கரை · சென்னைக் கோட்டை · பூங்கா நகர் · சென்னை எழும்பூர் · சேத்துப்பட்டு · நுங்கம்பாக்கம் · கோடம்பாக்கம் · மாம்பலம் · சைதாப்பேட்டை · கிண்டி · பரங்கிமலை · பழவந்தாங்கல் · மீனம்பாக்கம் · திரிசூலம் (ஊர்) · பல்லாவரம் · குரோம்பேட்டை · தாம்பரம் சானடோரியம் · தாம்பரம் · பெருங்களத்தூர் · வண்டலூர் · ஊரப்பாக்கம் · கூடுவாஞ்சேரி · பேத்தேரி · காட்டாங்குளத்தூர் · மறைமலைநகர் · சிங்கபெருமாள்கோவில் · பரணூர் · செங்கல்பட்டு · ரெட்டிபாளையம் · Villiambakkam · பாலுர் · பழையசிவராம் · வாலாஜாபாத் · Nathapettai · காஞ்சிபுரம் · Tirumalpur · தக்கோளம் · அரக்கோணம் |