செங்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கொடி
Senkodi
செங்கொடி
பிறப்புகாஞ்சிபுரம்
இறப்பு28 ஆகத்து 2011
காஞ்சிபுரம்
பெற்றோர்பரசுராமன்

செங்கொடி (Senkodi, அகவை:21, இறப்பு: 28 ஆகத்து 2011) ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011 ஆகத்து 28 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.[1] இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.

நிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.[2]

2011 ஆகத்து 31 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Leaders pay homage to Sengodi: Seek celemency to 3 Rajiv killers[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற தோழர்.செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு! - சென்றுவா தமிழினப் பெருமகளே..." Archived from the original on 2011-12-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-02.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கொடி&oldid=3604796" இலிருந்து மீள்விக்கப்பட்டது