சுலைமான் நபி
| அரசர் சுலைமான் நபி | |
|---|---|
சாலமோன் அரசர் தாம் கட்டவிருந்த எருசலேம் கோவிலின் முன்வரைபடத்தைப் பார்வையிடுகிறார். விவிலிய ஓவியம். காலம்: 1896. |
|
| தெய்வீகமான அரசர், நபி, ஞானமுள்ள சாலமோன்', கோவில் கட்டமைப்பாளர். | |
| ஏற்கும் சபை/சமயம் | யூதேயம் கிறித்தவம் இஸ்லாமியம் |
| செல்வாக்குச் செலுத்தியோர் | தாவீது |
| செல்வாக்குக்கு உட்பட்டோர் | பல யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம் அரசர்கள் |
சுலைமான் நபி அல்லது (விவிலியத்தின் பார்வையில், சாலொமோன் அரசர்) (ஆங்கிலம்: Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה (Shlomo), அரபு மொழி: سليمان (Sulaymān), கிரேக்க: Σολομών (Solomōn))பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.[1] இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.[2] இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.[3][4] இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் தாவூது நபியின் மகனாவார்கள்.[5]