சுப. வீரபாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப வீரபாண்டியன் அல்லது பேராசிரியர் சுப வீரபாண்டியன் சுருக்கமாக சுபவீ என அழைக்கப்படும் இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாவட்டத்தில் 1947 ஆம் வருடம் பிறந்தவராவார். சிறந்த தமிழ் மொழிப் பேச்சாளரும், தமிழ் பற்றாளரும், பகுத்தறிவுவாதியும் ஆவார். இவர் கல்லூரி பேராசிரியராகப் பணி புரிந்தவர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராகத் தற்பொழுது விளங்குகின்றார். இவரின் உடன் பிறந்தவர் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரான சுப முத்துராமன் (எஸ்.பி. முத்துராமன்). இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலனில் அதிக பற்று கொண்டவர். தமிழ் தேசியச் சிந்தனையாளர்