சுஜாதா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுஜாதா மோகன்
സുജാത മോഹന്‍
பிற பெயர்கள்இசைக்குயில் , இசை தேவதை
பிறப்புமார்ச்சு 31, 1964 (1964-03-31) (அகவை 59)[1][2]
திருவனந்தபுரம், இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைத்துறையில்1974–இன்று வரை

சுஜாதா மோகன் (பிறப்பு: மார்ச்சு 31, 1964) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 20000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.

இளமைக் காலம்[தொகு]

சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963 ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார்.

திருமண வாழ்க்கை[தொகு]

1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • 2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும், 1996-ல் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இருந்து ‘பூ பூக்கும் ஓசை’ பாடலுக்கும், 1993-ல் ‘புதிய முகம்’ திரைப்படத்தில் இருந்து ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ மற்றும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இருந்து ‘என் வீட்டு தோட்டத்தில்’ போன்ற பாடலுக்காக, சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ் அரசு மாநில விருது வழங்கப்பட்டது.
  • பதினொரு முறை பிலிம் கிரிட்டிக்ஸ் விருது.
  • சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
  • தினகரன் விருது.
  • 1996, 1999 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கேரளா மாநில திரைப்பட விருது.
  • 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான ஏசியாநெட் திரைப்பட விருது.
  • 2008 – ஜி.எம்.எம்.ஏ மூலம் சிறந்த பெண் பாடகர் விருது.
  • 2009 – ஸ்வராலையா யேசுதாஸ் விருது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indicine - Sujatha Mohan's Biography
  2. One India - Biography of Sujatha Mohan
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_மோகன்&oldid=3908908" இலிருந்து மீள்விக்கப்பட்டது