சுக்கிரீவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை நாட்டின் மன்னராக்குவேன் என இராமன் உறுதியளித்தல்

சுக்கிரீவன் (ஆங்கிலம்: Sugreeva) (சமசுக்கிருதம்: : सुग्रीव, Sugrīva) இந்து காவியமான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது.[1] சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிட்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.[2] பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை அரக்கர் அரசன் இராவணனிடம் இருந்து மீட்பதற்குப் புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான். இவன் சூரிய தேவனின் மைந்தன் ஆவான்.

அவர் ஜாவானீஸ் என்றும் அழைக்கப்படுகிறார்: சுக்ரிவா, சு-கிரிப், சுகீப், சுகிரீப், சூக்ரிம், சங்க்கிப், குக்கிரிவன், துகேயிக், சுக்ரீவா அல்லது சுக்ரீவ் என்று பலப் பெயர்களில் அழைக்கப்பட்டார்.

சுக்கிரீவனின் கதை[தொகு]

ச்க்ரீவனின் கதை என்பது இராமாயணத்தின் ஒரு பகுதியாகும். மேலும் சுருக்கமான [[மகாபாரதம்]|மகாபாரதத்தில்]] இவரைப் பற்றிய குறிப்புகள் சுருக்கமாக உள்ளது

சுக்ரீவாவுக்கும் வாலிக்கும் உள்ள கருத்து வேறுபாடு[தொகு]

சுக்ரீவனை இராமன் சந்திக்கும் காட்சி

வாலி கிஷ்கிந்த ராஜ்யத்தை ஆண்டான்; அவரது குடிமக்கள் வானரர்கள் ஆவர். தாரை என்பவள் அவரின் மனைவியாவாள். ஒரு நாள், மாயாவி என்ற ஒரு அரக்கன் தலைநகரின் வாயில்களுக்கு வந்து வாலியைச் சண்டைக்கு வருமாறு சவால் விட்டான். வாலி சவாலை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனைத் துரத்திச் செல்லும் போது அந்த அரக்கன் பயங்கரமான மற்றும் ஆழமான ஒரு குகைக்குள் ஓடிவிடுகிறான். சுக்ரீவனைக் குகைக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி, அரக்கனைப் பின்தொடர்ந்து வாலி குகைக்குள் நுழைகிறான். இருவருக்கும் நாள் கணக்கில் யுத்தம் நீடிக்கிறது.

குகைக்குள் சென்ற வாலி நீண்ட நாட்களுக்குத் திரும்பி வராததாலும், குகையில் பலத்த கூச்சல்களைக் கேட்டதாலும் அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறுவதைக் கண்டதாலும், சுக்ரீவன் தனது சகோதரன் வாலி கொல்லப்பட்டதாக முடிவு செய்து கொண்டான். கனமான இதயத்துடன், சுக்ரீவன் குகையின் வாயிலை ஒரு கற்பாறையை மூடுவிடுகிறான். பின்னர், கிட்கிந்தைக்குத் திரும்பி, அரசாட்சியைப் ஏற்கிறான். ஒருவழியாக, வாலி, அரக்கனுடனான தனது போரில் வெற்றிபெற்று வீடு திரும்பிகிறான். சுக்ரீவன் தன்து நாட்டின் அரசனாகச் செயல்படுவதைப் கண்ட அவன், தனது சகோதரன் தனக்குத் துரோகம் இழைத்து விட்டதாக என்று முடிவு செய்கிறான். சுக்ரீவன் தாழ்மையுடன் தனது நிலையை விளக்க முயன்றாலும், வாலி அதை கேட்கவில்லை. இதன் விளைவாகச் சுக்ரீவன் அரசவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். வாலி சுக்ரீவனின் மனைவி "ரூமா" வை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்று விடுகிறான்., சகோதரர்கள் இருவரும் கடுமையான எதிரிகளாக மாறினர்.[3] ரிசியமுகி என்ற முனிவர் தனது நிலத்தில் வாலி கால் வைத்தால் அவனுக்கு மரணம் உண்டாகும் எனச் சாபமிட்ட காரணத்தால் வாலி அங்குக் கால் வைக்க முடியாதென்பதால் சுக்ரீவன் அங்குத் தஞ்சமடைந்தான்.

சுக்ரீவனின் கூட்டணி[தொகு]

ராமனும் லட்சுமணனும் சுக்ரீவனைச் சந்திக்கிறார்கள்

சுக்ரீவன் நாடு கடத்தப்பட்டபோது, தனது மனைவி சீதையை அரக்கர்களின் அரசனான ராவணனன் என்ற அரக்கனிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விஷ்ணுவின் அவதாரமான இராமரை அறிமுகப்படுத்திக் கொண்டார். இராமன் சுக்ரீவனிடம் வாலியைக் கொன்றுவிடுவதாகவும், சுக்ரீவனை வானரர்களின் அரசனாக மீண்டும் நியமிப்பதாகவும் உறுதியளிக்கிறார். சுக்ரீவன், இதையொட்டி, இராமருக்கு அவரது மனைவின் தேடலுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறான்.[4]

இராமர் வாலியைக் கொன்று ராஜ்யத்தைச் சுக்ரீவனிடம் ஒப்படைத்தல்[தொகு]

வானர வாலியைக் கொல்லுதல்

சுக்ரீவனும், இராமரும் சேர்ந்து வாலியைத் தேடிச் செல்கின்றனர். இராமர் பின்னால் நின்று, சுக்ரீவன் வாலியைப் போருக்கு அழைக்கிறான். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் விரைந்து, மரங்கள் மற்றும் கற்களுடன், கைமுட்டிகள், நகங்கள் மற்றும் பற்களுடன் சண்டையிட்டனர். இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் காரணத்தால் இராமரால் இருவரையும் பிரித்தறிய முடியவில்லை. சுக்ரீவனின் ஆலோசகர் அனுமன் சுக்ரீவனின் கழுத்தில் ஒரு பூ மாலையைப் போடுகிறான். அப்போது இராமர் தனது வில்லுடன் வெளிப்பட்டு வாலியின் இதயம் வழியாக ஒரு அம்புக்குறியைச் செலுத்துகிறார். வாலி இறந்து போகின்றான். வாலியின் மரணத்திற்குப் பிறகு, சுக்ரீவன் வானர இராச்சியத்தை மீட்டெடுத்தார், அவரது மனைவியை ரூமாவைத் திரும்பப் பெற்றார். மேலும் வாலியின் பிரதான மனைவி தாராவையும் தனது மனைவியாக்கிக் கொண்டு அவளின் மகனான அங்கதனுக்கு இளவரசர் பட்டம் சூடினான்.[5]

குறிப்புகள்[தொகு]

  1. நட்புக் கோட் படலம்
  2. CANTO VIII.: RÁMA'S PROMISE.
  3. Ramayana of Valmiki, Book IV, Canto 9–10.
  4. Ramayana of Valmiki, Book IV, Canto 8, 10; Mahabharata, Book III: Varna Parva, Section 278.
  5. Ramayana of Valmiki, Book IV, Canto 11 ff.; Mahabharata, Book III: Varna Parva, Section 278.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sugriva
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sugriva
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரீவன்&oldid=3832486" இலிருந்து மீள்விக்கப்பட்டது