சிவபோக சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவபோக சாரம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் பலராலும் பெரிதும் அறிமுகமானது.

இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது. இந்த நூல் தரும் கருத்துகளில் சில: [1]

  • சாத்திரம் படிப்பதும், துதிப்பதும், பூசிப்பதும் பயன்ற்றவை [2]
  • திருமுறை ஓதிக் கருத்தில் கொள் [3]
  • சில தலங்களைச் சொன்னாலே முத்தி [4]
  • போலி குருமார்கள் [5]
  • புலன் பொய் [6]
  • நீதி [7] [8]
  • தெரியாப் பரப்பிரமம் [9]
  • சட சித்து [10]
நூல் பதிப்பு[தொகு]
  • வி. சுந்தர முதலியார் பதிப்பு 1890
  • ரிப்பன் பிரசு பதிப்பு 1923
  • தரும்புர ஆதீனப் பதிப்பு - பல முறை

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. கருத்துப் பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்புச் செய்யப்பட்டுள்ளன.
  2. உரை இழந்தால், உன்னும் உணர்வு இழந்தால், மாயைத்
    திரை இழந்தால் காண்கின்ற தேவை – வரை பெருக
    வாசிப்பதும், நாவால் வாழ்த்துவதும், நாடகமாய்ப்
    சூசிப்பதும், சுத்தப் பொய். (பாடல் 13)

  3. ஆசையறாய், பாசம் விடாய், ஆன சிவ பூசை பண்ணாய்,
    நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் – சீசீ
    சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய்
    மனமே! உனக்கென்ன வாய். (பாடல் 138)

  4. தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம்,
    முல்லைவனம், கூடல், முதுகுன்றம், - நெல்லைகளர்
    காஞ்சி, கழுக்குன்றம், மறைக்காடு, அருணை, காளத்தி,
    வாஞ்சியம், என். முத்தி வரும். (பாடல் 139)

  5. தன்னை அறியார், தலைவன்தனை அறியார்
    முன்னை வினையின் முடிவு அறியார் – பின்னைக்
    ‘குருக்கள்’ என்னும் பேர் இட்டுக்கொள்ளுவர்கள், ஐயோ
    தெருக்கள் தனிலை சிலர். (பாடல் 126)

  6. துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
    விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
    செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
    பொய்யடா பொய்யடா பொய். (பாடல் 107)

  7. நின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை
    நின்னை வறிஞன் என நீ நினைமின் – நின்னின்
    சிறியார் வறுமை நினை, சிந்தை உக என்றும்
    குறியா இடும்பை துக்கம் கோள். (பாடல் 120)

  8. பரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன்
    வர வரக் கண்டு ஆராய் மனமே – ஒருவருக்கும்
    தீங்கு நினையாதே, செய்ந்நன்றி குன்றாதே
    ஏங்கி இளையாது இரு. (பாடல் 132)

  9. ஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்
    மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்
    தெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்
    சரி யார், சிதம்பர நாதா. (பாடல் 43)

  10. ஆர் பெரியர், ஆர் சிறியர், ஆர் உறவர், ஆர் பகைஞர்,
    சீர் பெரியர் ஆனந்த சிற் சொரூபர் - பேர் பெரியர்
    எங்கெங்கும் தாமாய் இருந்து, சட சித்து அனைத்தும்
    அங்கங்கு இயற்றுவது ஆனால். (பாடல் 96)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபோக_சாரம்&oldid=2538433" இலிருந்து மீள்விக்கப்பட்டது