சிலப்பதிகார நடனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலப்பதிகாரத்தில் மொத்தம் 11 வகை நடனங்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. அவற்றில் ஆறு வகைகள் நின்று கொண்டு ஆடுவனவாகவும் ஐந்து வகைகள் வீழ்ந்து ஆடுவதாகவும் உள்ளன.

வகைகள்[தொகு]

  • அல்லியம் - கண்ணன் யானையின் கொம்பை ஒடித்ததைப் பாடி ஆடுதல்.
  • கொடுகொட்டி - சிவ நடனம். முப்புரம் எரித்த போது அதைக்கண்டு மகிழ்ந்து கைகொட்டியபடி ஆடிய ஆட்டம். இதை கொடுகொட்டிச் சேதம் என்றும் கூறுவர்.
  • குடைக்கூத்து - முருகன் அசுரரை வென்று ஆடிய நடனம். காவடியாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
  • குடக்கூத்து - திருமால் தன் பேரனான வானன் என்பவனை அசுரனின் சிறையில் இருந்து மீட்க ஆடிய ஆட்டம். கரகாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
  • பாண்டரங்கம் - திரிபுரம் எரித்து சாம்பலாக்கப்பட்ட பிறகு சிவனாடிய ஆட்டம்.
  • மல் - கண்ணன் வாணன் என்ற அரக்கனை மல்லாடிக் கொன்றது.
  • துடியாடல் - முருகன் சூரபதுமனைக் கொன்று உடுக்கை (துடி) கொண்டு ஆடிய பாடல். இதில் கடலே அரங்கமாக கொள்ளப்பட்டது.
  • கடையம் - வாணன் என்னும் அரக்கனின் வயலில் இந்திராணி உழத்தி வடிவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து. கடைக்கூத்து என்றும் கூறுவர்.
  • பேடு - காமன் பேடாகி ஆடிய நடனம்.
  • மரக்கால் - காளி மரக்காலை உழக்கி அசுரர் ஏவிய பாம்பு, தேள் முதலியவற்றை எதிர்த்து ஆடியது.
  • பாவை - திருமகள் ஆடிய மோகினி ஆட்டம். பாவைக்கூத்தாகிய பொம்மலாட்டம் எனக்கருதப்படுகிறது.

மூல நூல்[தொகு]

  • சுரா இயர்புக், 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலப்பதிகார_நடனங்கள்&oldid=1060571" இலிருந்து மீள்விக்கப்பட்டது