சித்திர மடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்திர மடல், மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் காளமேகப் புலவர்; காலம், 15ம் நூற்றாண்டு. இதில் 174 கண்ணிகளும், ஒரு காப்புச் செய்யுளும் உள்ளன. பிற்கால மடல் இலக்கியங்கள் போல பாட்டுடைத் தலைவனின் சிறப்பை விரித்துக் கூறாது இருப்பது இதன் தனிச்சிறப்பு. காதலில் ஏமாற்றம் உற்றவர் தம்மை வருத்திக்கொள்வதை விவரிக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திர_மடல்&oldid=3244121" இலிருந்து மீள்விக்கப்பட்டது