சாத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் இலக்கியங்களுக்கு இணங்க தீய சக்திகளின் ஓர் உருவகம்.[1] சாத்தான் என்ற எண்ணக்கரு பாரசீகத்தின் பண்டைய சரதுசம் சமயக் கடவுள் அகுரா மஸ்தாவிற்கு எதிரான ஒரு தீயசக்தி ஆகும். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன், தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.[2]

மதங்களின் பார்வையில்[தொகு]

கிறிஸ்தவம்[தொகு]

கிறிஸ்தவ மார்கத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளப்பட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்&oldid=3777398" இலிருந்து மீள்விக்கப்பட்டது