சவிகல்ப சமாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்சலி முனிவர்

சவிகல்ப சமாதி (சமசுகிருதம்: सविकल्पसमाधि)என்பது, அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் வடிவை அடைந்த மனதின் ஒருமைபாடு சமாதி நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர்.[1]

விகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது (அறிவானது) அறிபவனான தன்னுடைய மற்றும் அறிவினுடைய எண்ணங்களுடனயே இரண்டற்ற பிரம்ம வஸ்துவின் மீது நிலைத்து நிற்கும். பிரம்ம வஸ்துதான் முதன்மையானதாகும். அறிந்து கொள்ளும் அறிவானது குறைந்து இருக்கும். அதனால் தற்காலிகமாக அந்த இரண்டும் மறக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஒடுங்கி இருப்பதில்லை. இந்த சவிகல்ப சமாதியை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைப்பதுண்டு.

சவிகல்ப சமாதி நிலையில் களி மண்ணால் செய்யப்பட்ட யானை போன்றவை (பொம்மை யானை) தோன்றிக் கொண்டிருந்தாலும், அத்துடன் களி மண்ணும் தோன்றிக் கொண்டிருப்பதைப் போல, பன்மையான இவ்வுலகமானது (துவைத பிரபஞ்சம்) தோன்றிக் கொண்டிருந்தாலும் இரண்டற்ற அத்வைத பிரம்ம வஸ்துவும் உணரப்படுகிறது.

களிமண்ணினால் செய்யப்பட்டுள்ள யானையைக் காணும்பொழுது, அறிவுடைய எவருமே அதையே உண்மையான யானை என்று எண்ண மாட்டார்கள். யானை என்னும் பெயர் மற்றும் யானை என்னும் விலங்கின் உருவமானது அதற்கு இருந்தாலும், இந்தப் பெயரும், உருவமும் வெறும் பேச்சளவு மட்டுமே ஆகும். அது உண்மையிலேயே களிமண் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது. அதைப் போன்றே, பெயரையும், வடிவத்தையும், பெற்றுள்ள உலகமாக இருப்பினும், அறிபவன், அறிவு, அறியப்பட்ட வஸ்து (பிரம்மம்) என்னும் மூன்றும் காணப்பட்டாலும், அத்துடனேயே பிரம்ம வஸ்துவின் அனுபவமும் (பிரம்மானுபவம்) கூட சவிகல்ப சமாதியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத் துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவிகல்ப_சமாதி&oldid=3913670" இலிருந்து மீள்விக்கப்பட்டது