சரபா
சரபா அல்லது சரபம் என்பது ( கன்னடம்: ಶರಭ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாகவும் விவரிக்கப்படுகிறது. [1][2] சரபம் என்பது சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எட்டுக்கால் பறவை (எண்காற்புள்) ஆகும். தமிழ் இலக்கியங்களில் இது சிம்புள் எனவும் போற்றப்பட்டுள்ளது. நான்கு காலும் பறக்கும் இறகுகளும் கொண்டு கோயில் சிற்பங்களில் காணப்படும்.
திருமால் நரசிங்க உருவம் [3] தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
வேறு கற்பனைகள்[தொகு]
- சரபம் என்னும் பறவை 8 கால்கள் கொண்டது. சிங்கத்தைக் கொல்லும் வலிமை பெற்றது. [4]
- 20 தலைகள் கொண்டது. [5]
- காளமேகப் புலவர் பாடல்
- மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
- தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
- ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
- காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!
சரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
மேற்கோள்கள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ Pattanaik, Devdutt (2006). Shiva to Shankara: decoding the phallic symbol. Indus Source. p. 157. ISBN 8188569046. http://books.google.co.in/books?id=Oka4ekgGDRoC&pg=PT29&dq=Sharabha&ei=3zRFS4m2FIjKlQToibTrDQ&cd=9#v=onepage&q=Sharabha&f=false.
- ↑ "शरभ". Monier Williams Sanskrit-English Dictionary. பார்த்த நாள் 18 January 2010.
- ↑ நரசிங்க அவதாரம்
- ↑ சரபம் எட்டுக்கால் பறவை
- ↑ 20 தலைகள் கொண்டது