சமுச்சய உவமையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமுச்சய உவமையணி என்பது உவமையணி வகைகளுள் ஒன்றாகும்.உவமிக்கப்படும் பொருள் உவமையோடு ஒரு பண்பில் மட்டும் ஒப்பாகாமல் இதனாலும் ஒக்கும் என வருவது சமுச்சய உவமையாகும். (சமுச்சயம்- இரண்டு முதலியவற்றின் கூட்டம்.) சான்று:

அளவே வடிவொப்ப தன்றியே பச்சை

இளவேய் நிறத்தானும் ஏய்க்கும்- துளவேய் கலைக்குமரி போர் துளக்கும் காரவுணர் வீரம் தொலைக்குமரி ஏறுகைப்பான் தோள். விளக்கம்:
அளவு வடிவு ஒப்பதன்றி நிறாத்தானும் ஏய்க்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது சமுச்சய உவமையாயிற்று. சமுச்சய உவமையை வீர சோழியம் 'உம்மை உவமை' எனக் கூறுகிறது.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுச்சய_உவமையணி&oldid=959089" இலிருந்து மீள்விக்கப்பட்டது