க. பெருமாள்
க. பெருமாள் (பிறப்பு: மே 5 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவியழகர்' எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஒரு வர்த்தகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "கவி வானில் கவியழகர்" (கவிதைகள், அச்சில்)
பரிசுகளும் விருதுகளும்[தொகு]
- பாரதிதாசன் குழுவினிரின் எழுத்தாளர் தினத்தில் கவிதைக்கு முதல் பரிசு (2001);
- தமிழ் நேசன் வழங்கியது "கவியழகர்" என்னும் அடைமொழி (1965);
- அரசாங்கம் வழங்கிய PJM, PJK விருது
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் க. பெருமாள் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்