கொள்கை வெறி
கொள்கை வெறி(fanaticism) எனப்படுவது ஒருவர்க்கு மதம், விளையாட்டு போன்ற ஏதோ ஒன்றின் மீது கொண்ட அதீத பற்று ஆகும். இதைப் பற்றி தத்துவ மேதை ஜார்ஜ் சண்டயானா, கொள்கை வெறி என்பது கொள்கையினை மறந்தால் அதற்காக சக்தியை இரட்டிப்பாக்குவது ஆகும் என்று கூறுகிறார். இதைப் பற்றி வின்சுடன் சர்ச்சில் கூறியது,கொள்கை வெறியுடையோன் தன் மனதையோ, தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதாகும்.. நெல் போசுடுமேன் என்பவர் தன் நூலான கிராசி டாக்கில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
கொள்கை வெறிக்கான காரணமே அந்தக் கொள்கையின் தன்மை பொய் இல்லாவிடிலும், உண்மை போல் காட்டப் படுவதும், பொய்யாக்கப்,படமுடியாததும் ஆகும்
இரசிகனுக்கும் கொள்கை வெறியுடையோனுக்கும் இடையே வேறுபாடு உண்டு எனவும் குறிப்பிடுகிறார். இது பல வகைப்படும். இவை உணர்ச்சிகளையோ, சமயத்தையோ, பொருளையோ, இனத்தையோ, நாட்டையோ, அரசியலையோ சார்ந்து வகைப் படுத்தப் பட்டுள்ளன.