குற்றியலிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.[1][2][3]

எடுத்துக்காட்டு

  • நாடு + யாது -> நாடியாது
  • கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

  • கேள் + மியா -> கேண்மியா
  • வால்+ மியா = வான்மியா
  • கண்டேன் + யான் -> கண்டேனியான் [4]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் நூன்மரபு 2
  2. யகரம் வரு வழி இகரம் குறுகும்
    உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5
  3. யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
    அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல்
  4. வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92-54)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றியலிகரம்&oldid=3360420" இலிருந்து மீள்விக்கப்பட்டது