குறுக்குவிசாரணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவீன நீதிநிறுவனங்களில் குறுக்குவிசாரணை ஒரு முதன்மையான பங்கைப் பெற்றுள்ளது. குறுக்குவிசாரணை என்பது வழக்குவிசாரணையின்போது ஒரு சான்றாளரை (சாட்சியை) அவரின் எதிர்த்தரப்பினர் புரியும் விசாரணையாகும். இது வழக்குப் பொருண்மைகளின் உண்மைத் தன்மையை உரசிப்பார்க்கும் உரைகல்லாக கருதப்பட்டாலும் பலநேரங்களில் தருக்கவிளையாட்டால் உண்மையைப் பொய்யாக்குகிற, பொய்யை உண்மையாக்குகிற வழக்குரைஞரின் சாதுரிய வித்தையாகவே நடைமுறையில் நிலவுகிறது.
பொருளடக்கம் |