குருவிக்கரம்பை வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருவிக்கரம்பை வேலு (நவம்பர் 26, 1930 - மார்ச் 3, 2010) சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். தீவிர நாத்திகர். குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். சிந்து முதல் குமரி வரை, இதுதான் வேதம், இவர் தான் புத்தர், நாத்திகம் பேசும் சூத்திரச்சியே ஆகிய நூல்களையும் இன்னும் பல நூல்களையும் எழுதியவர். இவர் 3-3-2010ல் இறந்தார். இவரது உடல் 4-3-2010 அன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிக்காக) அவருடைய குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிக்கரம்பை_வேலு&oldid=1438914" இலிருந்து மீள்விக்கப்பட்டது