குருதோங்மார் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குருதோங்மார் ஏரி | |
|---|---|
|
|
|
| அமைவிடம் | வடக்கு சிக்கிம், சிக்கிம், இந்தியா |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| மேற்பரப்பின் உயரம் | 17,150 அடி (5 மீ) |
| குடியிருப்புகள் | மாங்கன், வடக்கு சிக்கிம் 56 கிமீ. லாச்செனில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ. |
குருதோங்மார் ஏரி அல்லது குருதோக்மார் ஏரி என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு புனித ஏரியாகும். இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17, 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த ஏரி தீட்தா ஆற்றின் மூலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
இந்த மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது நிலைகளை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு ஆக்சிசன் குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.