குமரி கலை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரி கலை விழா 2010 (kumari carnival 2010) என்பது கன்னியாகுமரி மாவட்ட நிருவாகம் மற்றும் மத்திய மாநில சுற்றுலாத் துறை இணைந்து கன்னியாகுமரியில் நடத்தியவொரு நிகழ்வாகும்.

நோக்கம்[தொகு]

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியக் கலைவளத்தைக் காட்சிப்படுத்தும் பொருட்டும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி விவரம்[தொகு]

இந்நிகழ்வு கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திசம்பர் 19ஆம் நாள் முதல் திசம்பர் 23 ஆம் நாள் வரை ஐந்து தினங்கள் நடைபெற்றது. இதில் காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கலைஞர்கள் மொத்தம் 1042 பேர் பங்கேற்றனர்.

மேலும் ஆண்டு தோறும் திசம்பர் மாதம் இது மாதிரியான நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வெளியிணைப்பு[தொகு]

குமரி கலை விழாவின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-08-19 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_கலை_விழா&oldid=3240744" இலிருந்து மீள்விக்கப்பட்டது