குஜராத் வன்முறை 2002

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்

குஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக சமுக பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையாகும். பெப்ரவரி 27, 2002 கோத்ரா ரயில் நிலையத்தில் இந்து யாத்திரிகள் பயணம் செய்த தொடருந்துப்பெட்டி எரிக்கப்பட்டு 58 பேர் இறந்த சம்பவத்தை அடுத்தே குஜராத்தில் இந்து-முஸ்லிம்களுக்கிடையில் வன்முறை நிகழ்ந்தது.

பொருளடக்கம்

[தொகு] கலவரத்தின் ஆரம்பம்

அயோத்தி பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம். அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில் கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்கள் மீது சமுக பயங்கரவாதிகள் தீ வைதனர். இதில் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இசுலாமியர்கள்தான் சபர்மதி விரைவு வண்டியை எரித்ததாக பயங்கரவாதிகளால் வதந்தி கிளப்பப்பட்டது .[1]

சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. உச்ச நீதிமன்றமும் எதிர்கட்சிகளும் இணைந்து தங்களது எதிர்ப்பை காட்டவே பல வாரங்களுக்கு பின் கலவரம் முடிவுக்கு வந்தது. போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலவரக்காரர்களுக்குத் தேவையான அனைத்து "உதவிகளையும்?" செய்தனர். தெஹல்கா ரிப்போர்ட். நடுவண் அரசு தன் பங்கிற்கு மாநில அரசுக்கு இணையாக அமைதி காத்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் "மதச்சார்பற்ற அரசு?" விமர்சிக்கப்பட்டது.இந்த சம்பவத்திற்க இந்திய பிரதமர் ஐ.நா சபையில் மன்னிப்பு கேட்க நேரிட்டது. இது ஒரு தேசிய இழிவாக கருதப்படுகிறது. குஜராத் கலவரங்களுக்குப் பின் இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Wid.jpg

[தொகு] பாதிப்புகள்

Widow.jpg

இந்திய மத்திய அரசின் தகவலின்படி இக்கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு மேலும் 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்படுள்ளனர். சுயாதீன மனித உரிமை கண்காணிப்பாளர்களின தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000 ற்கும் அதிகமென கூறப்பட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின் படி இவ்வெண்ணிக்கை 2000 க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்திய நடுவன் அரசு இவற்றையெல்லாம் மறுத்துள்ளது. வன்முறையில் வீடுகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டும், பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

[தொகு] பின் விளைவுகள்

  1. கலவர வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம் மோடியை "நவீன நீரோ" என கடுமையாக விமர்சித்தது.
  2. இசுலாமியர்களின் ஆதரவை இனி இழக்க நேரிடும் என எண்ணிய பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் அப்துல் கலாமை குடியரசு தலைவராக பரிந்துரைத்தன.
  3. சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதன் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
  4. ஆஜ் தக தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் மோடியின் கோர முகம் பகிரங்கமாக வெளிப்பட்டது. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும்,இவைகளுடன்

சிறுபாண்ம பெண்களை அநியாயமாக புணர்ந்த கலவரகாரர்களுக்கும், அகதமபாதில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கும் மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.[2][3] உச்ச நீதிமன்றம் இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Wi.jpg

[தொகு] கோத்ரா சம்பவமும் சந்தேகங்களும்-உண்மைகளும்

மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன அதில் முக்கியமான ஒன்று

  1. மிக முக்கியமான தடயமான எரிந்த பெட்டி உடனுக்குடன் அப்புரப்படுதப்பட்டது ஏன்?
  2. கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும், பெட்டியை எரிக்க உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளும் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி?

மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டான். அதே முறையை கோத்ராவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகமாகும்.

[தொகு] ஆதாரங்கள்

  • தெஹல்கா இணைய தளத்தில் குஜராத் 2002 ஒரு தொகுப்பு
பாபு பஜரங்கி என்பவனின் வாக்குமூலத்தை காண்க

[4]

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.milligazette.com/gujarat/index.htm
  2. FrontLine March 29, 2002
  3. http://www.milligazette.com/gujarat/index.htm
  4. Babu Bajrangi's statement from Gujarat 2002 -The Truth Full coverage, Tehelka Magazine, Tehelka.com

[தொகு] வெளி இணைப்புகள்:

"http://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_வன்முறை_2002&oldid=1397594" இருந்து மீள்விக்கப்பட்டது