காத்தான்குடித் தாக்குதல் 1990

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.[1]. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[2][3]

இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 1, 1990ல் அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்களும், 2 தியதி மதவாச்சி, மட்டக்களப்பு மற்றும் மஜீது புரம் ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்தே காத்தான்குடிப் படுகொலை நடந்தது. [4]

இத்தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாக அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தமிழ் பேசுபவர்களாக இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலமுறை தாக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.[5][6][7] [8]

இவற்றையும் பார்க்காவும் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

குறிப்புகள் [தொகு]

  1. "துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்" புத்தகத்திலிருந்து
  2. [1]
  3. towns shut down to mark massacre
  4. [2]
  5. [3]
  6. LTTE mercilessly slaughtered more than 100 Muslim civilians - including women and children
  7. Muttur Muslims fear LTTE attack
  8. SOUTH ASIA INTELLIGENCE REVIEW