காசாபா தாதாசாகேப் சாதவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காசாபா தாதாசாகேப் சாதவ் Khashaba Jadhav |
|
|---|---|
| பிறப்பு | ஜனவரி 15, 1926 |
| இறப்பு | ஆகஸ்ட் 14, 1984 |
| இருப்பிடம் | சட்டாரா,மகாராஷ்டிரா,இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | மற்போர் வீரர் |
| வென்ற பதக்கங்கள் | |||
|---|---|---|---|
| ஆண்களுக்கான மற்போர் | |||
| வெண்கலம் | 1952 ஹெல்சிங்கி | Bantamweight | |
காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 – ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.
இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.