கன்னிமாரா பொது நூலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன்னிமரா பொது நூலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள் நாளிதழ்கள் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும்.
இந்நூலகம் 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அப்போதைய சென்னை ஆளுநர் கன்னிமாரா பிரபு என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இங்கு மொத்தம் ஆறு இலட்சம் புத்தகங்களுக்கு மேல் உள்ளன.