கனநீர் ஆலை, மனகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரப் பிரதேசத்தில் மனகுருவில் என்ற இடத்தில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று.[1]

ஆந்திரப் பிரதேசத்தில் மனகுருவில் அமைந்த கனநீர் ஆலையும் H2S-H20, அதாவது நீர்-ஐதரசன் சல்பைட்டு பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட, இரு முறை வெப்ப பதனீட்டு முறையில், இந்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இரண்டாவது ஆலையாகும். சிங்கரேணி கரிச்சுரங்கத்தின் அருகிலும், கோதாவரி ஆற்றின் அருகிலும், மனகுரு அமைந்தது இந்த இடத்தை தெரிவு செய்வதற்கு காரணமாக அமைந்தது.[2] இந்த ஆலை 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உற்பத்தியைத் துவங்கியது, இவ்வாலையை அமைப்பதற்கான செலவு ரூபாய் 647.28 கோடியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
  2. ^ http://heavywaterboard.org/htmldocs/plants/Manuguru.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_ஆலை,_மனகுரு&oldid=3534801" இலிருந்து மீள்விக்கப்பட்டது