ஔகாரக் குறுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
                                   - நன்னூல்.95

எடுத்துக்காட்டு[தொகு]

  • ஔவை
  • ஔவியம்
  • ஔசிதம்
  • மௌவல்
  • வௌவால்[1]

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம்.

குறிப்பு[தொகு]

ஔகாரம் உயிர் எழுத்தின் வரிசையில் கடைசியாக நின்றாலும் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வரா.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔகாரக்_குறுக்கம்&oldid=3830065" இலிருந்து மீள்விக்கப்பட்டது