ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
| ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் |
|
|
சென்னை மாகாண முதல்வர்
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 23,1947 – ஏப்ரல் 6, 1949 |
|
| பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
| ஆளுநர் | ஆர்ச்சிபல்டு எட்வர்டு நியி, கிருசுண குமாரசிங் |
| முன்னவர் | த. பிரகாசம் |
| பின்வந்தவர் | குமாரசாமி ராஜா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | 1895 ஓமந்தூர், தென் ஆற்காடு , சென்னை மாகாணம் |
| இறப்பு | 1970 வடலூர் |
| தேசியம் | இந்தியன் |
| தொழில் | வழக்கறிஞர், எழுத்தாளர், Statesman |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியன் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
பொருளடக்கம் |
ஆரம்ப வாழ்க்கை [தொகு]
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகணத்தின் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தமிழ் நாட்டில் குடியேறிய ஒரு தெலுங்கு ரெட்டி குடும்பத்தில் பிறந்தார். அவர் வால்டர் ச்சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை இடுபடுத்தி கொண்டர்.
முதலமைச்சராக [தொகு]
ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவி காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்பு சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் தலித்கள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியன் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்
நினைவு [தொகு]
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது[1][2]
- இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது[3]