ஒல்லையூர் கிழான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒல்லையூர் கிழான் என்பவன் ஒல்லையூரில் வாழ்ந்த பெருமகன். இவனது மகன் பெருஞ்சாத்தன். இந்தப் பெருஞ்சாத்தனை வென்று ஒல்லையூரைக் கைப்பற்றியவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்.

ஒல்லையூர் மக்களின் தலைவன் ஒல்லையூர் கிழான். இந்த ஒல்லையூர் மன்னர் ஒருவராலும் இவனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இவனது மகன் பெருஞ்சாத்தன் தன்னாட்சி நிறுவ முயன்ற காலத்தில் பூதப்பாண்டியன் ஒல்லையூரைக் கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லையூர்_கிழான்&oldid=1263920" இலிருந்து மீள்விக்கப்பட்டது