ஒசி அபேகுணசேகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசி அமேகுணசேகரா
Ossie Abeyagunasekera
இலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர்
இலங்கை நாடாளுமன்றம்
for கொழும்பு மாவட்டம்
பதவியில்
25 ஆகத்து 1994 – 24 அக்டோபர் 1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-08-07)ஆகத்து 7, 1950
இறப்புநவம்பர் 9, 1994(1994-11-09) (அகவை 44)
தொட்டலங்க, பாலத்துறை, இலங்கை.
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை மக்கள் கட்சி

ஒசி அபேகுணசேகரா (Ossie Abeyagunasekera, 7 ஆகத்து 1950 - 9 நவம்பர் 1994) இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார்.[1] இவர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் காமினி திசாநாயக்காவை ஆதரித்து கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2] இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

1986 ஆம் ஆண்டில் ஒசி அபேகுணசேகரா விஜய குமாரணதுங்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரை விடுவித்தார். விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து குமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சியின் தலைவரானார். ஒசி அபேகுணசேகரா ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியை நிறுவி 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார்.

ஒசி அபேகுணசேகராவின் தந்தை ஏ. டபிள்யூ. ஏ. அபேகுணசேகரா என்பவரும் ஓர் அரசியல்வாதி ஆவார். துறைமுக ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மும்பையில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographyon Ossie".
  2. Jane's Sentinel examines the success of the LTTE in resisting the Sri Lankan forces

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசி_அபேகுணசேகரா&oldid=2238756" இலிருந்து மீள்விக்கப்பட்டது