ஐராவதி ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஐராவதி Ayeyarwaddy (ဧရာဝတီမ္ရစ) |
|
|---|---|
| Irrawaddy | |
| நாடு | மியான்மார் |
| முதன்மை நகரங்கள் |
மண்டலே, பகான், பாமோ |
| நீளம் | 2,170 km (1,348 mi) |
| வடிநிலம் | 411,000 km² (158,688 sq mi) |
| முதன்மை மூலம் | மாலி ஆறு |
| Other source | N'Mai |
| கழிமுகம் | இந்தியப் பெருங்கடல் |
|
ஐராவதி ஆறு மியான்மாரில் பாயும் வழிப்பாதையைக் காட்டும் வரைபடம். ஆறு வடக்கு-தெற்காக ஓடி வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது
|
|
ஐராவதி ஆறு (Ayeyarwady River) மியான்மாரின் மிக நீளமான ஆறு ஆகும். இது 2170 கிமீ (1350 மைல்) நீளம் உடையது. இது மியான்மரின் வட தெற்காக ஓடுகிறது; மிக முதன்மையான வணிக நீர்வழித் தடமாகவும் உள்ளது.
மியான்மாரின் வட உச்சியில் தொடங்கி அதனை கிழக்கு, மேற்காக இரு கூறுகளாக பிரித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வாறு வளமையான ஐராவதி கழிமுகத்தை உருவாக்கியுள்ளது.
இது முன்னர் மண்டலேவுக்கான பாதை என்று அழைக்கப்பட்டது.
2008 இல் வீசிய நர்கீஸ் புயலால் ஐராவதி கழிமுகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி ஏறத்தாழ 100,000 மக்கள் உயிர் இழந்தனர்.
