ஐயர்
| Iyer அய்யர் |
|---|
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ·பாரதியார் ·ரமண மகரிஷி ·இந்திரா நூயி ·சி. வி. இராமன் ·விசுவநாதன் ஆனந்த் |
| மொத்த மக்கள்தொகை |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், இலங்கை |
| மொழி(கள்) |
| தாய் மொழி: தமிழ். |
| சமயங்கள் |
| இந்து சமயம் |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் |
| பஞ்ச திராவிட பிராமணர்கள், தமிழ் மக்கள், ஐயங்கார் |
ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், பெரும்பாலும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்களுமான பிராமணர்கள் ஆவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்தப் பிராமணர்களும் ஐயர் பட்டம் தரிக்கின்றனர்.
ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் கோத்திரம், வேதம் என்பதின் வகையிலும் பகுக்கப்பட்டுள்ளனர்.
பிரிவுகள் [தொகு]
ஐயர் சமுகத்தில் பல பிரிவுகள் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
- Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press.