ஏகாம்பரகுப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏகாம்பரகுப்பம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய ஊர் ஆகும். இது நகரி மண்டலத்துக்கு உட்பட்டது.[1]

அமைவிடம்[தொகு]

இது ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் தமிழகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது நகரியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், திருப்பதியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், திருத்தணியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், நாகலாபுரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நிலப்பரப்பு[தொகு]

போக்குவரத்து[தொகு]

ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் தொடர்வண்டிகள் ஏகாம்பரக்குப்பத்தின் வழியாக செல்கின்றன.

மக்கள்[தொகு]

இது ஆந்திர மாநிலத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை கொண்ட ஊர். இங்கு வாழும் மக்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.

அரசியல்[தொகு]

பொருளாதாரம்[தொகு]

இங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். நூற்பாலைகளும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன.

அலுவலகங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf பரணிடப்பட்டது 2014-12-14 at the வந்தவழி இயந்திரம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும், மண்டல வாரியாக ஊர்களும் - ஆந்திரப் பிரதேச அரசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகாம்பரகுப்பம்&oldid=3236712" இலிருந்து மீள்விக்கப்பட்டது