எஸ். பி. முத்துக்குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. முத்துக்குமரன்

எஸ். பி. முத்துக்குமரன் (சூன் 16, 1968 - ஏப்ரல் 1, 2012) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் 2011ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

முத்துக்குமரன் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் சி. பழனிவேல் - முல்லையம்மாள் தம்பதிக்கு ஒரே மகனாக பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப் படிப்பை புதுகை மாமன்னர் கல்லூரியிலும் முடித்தார்.

அரசியலில்[தொகு]

கல்லூரிப் பருவத்தில் மாணவர் பேரவைத் தேர்தலில் வென்று, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இடதுசாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், 2009-ம் ஆண்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரைவிட, சுமார் 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மறைவு[தொகு]

முத்துக்குமரன் தனது 44வது அகவையில் 01.04.2012 அன்று சொக்கநாதபட்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் காலமானார்.[1][2] இவருக்கு மனைவி, ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._முத்துக்குமரன்&oldid=3365067" இலிருந்து மீள்விக்கப்பட்டது