எஸ். பி. பாலசுப்பிரமணியம்
| எஸ். பி. பாலசுப்ரமணியம் | |
|---|---|
| பிறப்பு | சூன் 4, 1946 |
| பிறப்பிடம் | |
| இசை வகை(கள்) | திரைப்படப் பாடல் |
| தொழில்(கள்) | பாடகர் , நடிகர் , திரைப்பட தயாரிப்பாளர் |
| இசைத்துறையில் | 1966 – இன்று |
| வலைத்தளம் | இணையத்தளம் |
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார். 1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] தொடக்கம்
1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது
[தொகு] சாதனை
36 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. நாளொன்றுக்கு இரண்டரை பாடல்கள் வீதம் இவர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடிவருகிறார் என்பது நிச்சயம் அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யும். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. அவர் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லையென்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் அவர்.
தேசியவிருது
| வருடம் | திரைப்படம் | பாடல் | மொழி |
|---|---|---|---|
| 1996 | மின்சார கனவு | தங்க தாமரை | தமிழ் |
| 1995 | சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை | உமண்டு க்ஹுமண்டு கன கர் | கன்னட |
| 1988 | ருத்ரவீன | செப்பாழனி உண்டி | தெலுகு |
| 1983 | சாகர சங்கமம் | வேதம் அனுவனுவுன | தெலுகு |
| 1981 | ஏக துஜே கே லியே | தேரே மேரே பீச் மேனி | ஹிந்தி |
| 1979 | ஷங்கர்பாரணம் | ஓம் கார நதானு | தெலுகு |
[தொகு] இளைஞர்களின் கனவு
குரலில் உற்சாகம், உணர்ச்சி, பாவம் குன்றாமல் எஸ்.பி.பி. பாடிவருகிறார்.எஸ்.பி.பி பாடிய பாடல்களில் இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது. கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.
[தொகு] இளையராஜாவுடன் இணைதல்
இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவின் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூட்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன என்பது உண்மை. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியதுபோல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக்கூடியவர் எஸ்.பி.பி.
நான்கு சகாப்தங்களாக தொடர்ந்துவரும் ஒரு பாடகர் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை