எங்க வீட்டுப் பிள்ளை
எங்க வீட்டு பிள்ளை | |
---|---|
இயக்கம் | சாணக்யா |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்சு சக்கரபாணி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 5176 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்க வீட்டுப் பிள்ளை (Enga Veettu Pillai) 1965ஆம் ஆண்டு எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1] இதனை இயக்கியவர் தபி சாணக்யா. தயாரித்தவர் பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்சன்ஸ், சக்கரபாணி. எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.[2] இது பெரும் வெற்றி பெற்றது.
ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
பாடல்கள்[தொகு]
- நான் ஆணையிட்டால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- கண்களும் காவடி சிந்தாகட்டும்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- பெண் போனாள்...இந்த பெண் போனால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.
- மலருக்குத் தென்றல் பகையானால்...
பாடலை இயற்றியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
- குமரிப் பெண்ணின் உள்ளத்திலே...
பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.