ஊசல்
ஊசல் என்பது ஊஞ்சல். குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர். சங்கப்பாடல்கள் இதனை ஊசல் என்கின்றன.
சங்கப்பாடல்களில் வரும் சில குறிப்பிடத்தக்க செய்திகள் இங்குச் சுட்டப்படுகின்றன.
பொருளடக்கம் |
ஊசல் செய்திகள் [தொகு]
- அசோகு [1] ஆல் [2] ஞாழல் [3] தாழை [4] பனை [5] வேங்கை [6] முதலான மரங்களில் ஊசல் கட்டி விளையாடியது பற்றிய குறிப்புகள் உள்ளன.
- தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊசல் கட்டி விளையாடியிருக்கின்றனர். [7]
- சிலர் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டி ஆடினர் [8]
- தாழைநார்க் கயிற்றாலும் [9] பனைநார்க் கயிற்றாலும் [10] ஊசல் கட்டி ஆடியிருக்கிறார்கள்.
- ஊசலாடுதலை ஊசல் தூங்குதல் என வழங்கினர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும் [11] தானே தனியே உந்தி ஆடியது பற்றியும் [12] காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும் [13] குறிப்புகள் உள்ளன.
- பனைமரத்து ஊசலில் பலர் ஒன்றாக அமர்ந்து ஆடியது பற்றியும் [14] குறிப்புகள் உள்ளன.
- காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும் [15] காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும் [16] குறிப்புகள் உள்ளன.
ஊசல்சீர் [தொகு]
தலைவி ஊஞ்சலில் ஆடுகிறாள்.
தோழியை அவள் ஊசல்சீர் பாடுக என்கிறாள்.
தலைவியின் தோளில் கரும்பு எழுதியவன் இப்போது வாட விட்டுவிட்டான் என்று இணைந்திருக்கும் அன்றில் பறவைகள் இரவெல்லாம் அகவவில்லை என்னும் பொருள்படத் தோழி பாடுகிறாள்.[17]
அப்படி இல்லை
ஊசல்நீரை அழித்து ஒன்று பாடுகிறேன்.
அன்று அவன் இரவெல்லாம் நம்மோடு இருந்தான் அல்லவா? என்று பாடுகிறாள் தவைவி. [18]
ஊசல்வரி [தொகு]
சிலப்பதிகாரத்தில் ஊசல்வரிப் பாடல்கள் மூன்று உள்ளன.
அவற்றில் ஒவ்வொன்றிரும் ஐந்து அடிகள் உள்ளன.
முதல் 4 அடிகளை ஒருத்தியும், ஐந்தாவது அடியை மற்றொருத்தியும் பாடுகின்றனர். [19]
ஊசல் பருவம் [தொகு]
பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஊசல்பருவம் என 10 பாடல்கள் பாடுகின்றனர்.[20]
இவற்றையும் பார்க்க [தொகு]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ அகம் 38,68
- ↑ அகம் 385
- ↑ அகம் 20
- ↑ கலித்தொகை 130
- ↑ அகம் 372
- ↑ நற்றிணை 368
- ↑ அகம் 368
- ↑ நற்றிணை 165
- ↑ அகம் 20
- ↑ நற்றிணை 90
- ↑ நற்றிணை 90
- ↑ கலித்தொகை 37
- ↑ அகம் 385
- ↑ அகம் 372
- ↑ அகம் 385
- ↑ கலித்தொகை 37
- ↑
தன்துணை இல்லாள் வருந்தினாள் கொல் என
இன்துணை அன்றில் இரவெல்லாம் அகவாவே – கலித்தொகை 131-27மு28. - ↑
அருளினன்கொல் தோழி அருளினன்கொல் தோழி
இரவெல்லாம் தோழி அருளனன் – கலித்தொகை 131 – 35மு36. - ↑
வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
தென்குமரி ஆண்ட செருவில் கயல்புலியான்
மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி
மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல். - சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை - ↑
புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி
பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
பொன்னூச லாடியருளே. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஊசல்பருவம் பாடல் 1