உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973
சட்டம். |
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா) (மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்கியூரிட்டி ஆக்ட்- என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே மிசா) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1973 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.
இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது.
இச்சட்டம் மனித உரிமையியலை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.
பொருளடக்கம் |
[தொகு] நெருக்கடி நிலை பிரகடனத்தின் பொழுது
நெருக்கடி நிலை அறிவிப்பின்போது (1975-1977) ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக விசாரணையின்றி கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளானார்கள். பல சட்டமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும், இந்திரா காந்தியின் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைதானார்கள். அதில் குறிப்பிடத்தக்க அரசியல் கட்சியான ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கைது செய்யப்பட்டனர்.
[தொகு] உருவாக்கம்
இந்திய அரசியலமைப்பின் 39 வது திருத்தச் சட்டமாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இச்சட்டம் சேர்க்கப்படுவதற்கு முன் இச்சட்ட வடிவை நீதிமுறைமையின் பரிசீலணைக்கு அனுப்பாமலேயே, இந்திய அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று தெரிந்த நிலையிலேயே, இந்திய அடிப்படை கட்டமைவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டது.
[தொகு] நீக்கம்
இச்சட்டம் 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினைத் தொடர்ந்து இந்தியாவின் ஆளுமைக்கு வந்த ஜனதா கட்சியினரின் ஆளுமை அரசு கொண்டு வந்த 42 வது திருத்தச் சட்டம் 1978 இன்படி, அதன் 9 வது அட்டவணையிலிருந்து இச்சட்டத்தினை நீக்கம் செய்தது.
[தொகு] சிறை சென்றவர்கள
- இச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்களில் சில முக்கியமானவர்கள்-;
-
- திரு.லாலு பிரசாத் யாதவ் (சிறை சென்றதின் நினைவாக இவரின் மூத்த மகளுக்கு மிசா என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
- திரு.லால் கிருஷ்ண அத்வானி
- திரு.அடல் பிகாரி வாஜ்பாய்
- திரு.சந்திரசேகர்
- திரு.மு. க. ஸ்டாலின்
|
||||||||||||||||||||