உறையூர்ச் சிறுகந்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறையூர்ச் சிறுகந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. குறிஞ்சித் திணையைச் சேர்ந்த அந்தப் பாடல் குறுந்தொகையில் 257ஆம் பாடலாக உள்ளது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

திருமணம் நடக்கவுள்ளது என்ற தோழியிடம் தலைவி சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

மரத்தில் வேர் கீழே செல்லும். கிளை மேலே செல்லும். பலாப்பழம் இதனைச் சொல்லிக் காட்டுகிறது. வேரில் பழுத்தாலும் தலையைக் கீழே தொங்கவிடுகிறது. வேரும் கிளையும் ஒன்றிக் கிடக்கும் மரம் போல நாங்கள் ஒன்றிக் கிடப்போம். நான் பலாப்பழம் போல இருப்பேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறையூர்ச்_சிறுகந்தனார்&oldid=606872" இலிருந்து மீள்விக்கப்பட்டது