உயிரியல் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உயிரிப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உயிரியல் போர் அல்லது உயிரிப் போர் என்பது கிருமிகளை அழிவு ஆயுதமாக பயன்படுத்தி நடைபெறும் போரைக் குறிக்கும். மனித போர் வரலாற்றில் உயிரியல் அழிவிகள் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. நஞ்சூட்டுவது, நோய்களைப் பரப்புவது, பாம்பு போன்ற கொடிய விலங்குகளை விடுவது, அழுகிய பிணங்களை விதைப்பது அல்லது ஏவுவது என்று பலதரப்பட்ட உயிரியல் அழிவிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. நவீன உயிரியல் துறையின் வளர்ச்சியால் மிக விரைவாக பெருகிப் பரவும் உயிரியல் அழிவுக் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தபடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 2008 வெளியான தமிழ்த் திரைப்படம் தசாவதாரம் இந்த சாத்தியக்கூறை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது.