உப்பாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்பாறு என்பது இந்தியாவில் தமிழகத்தின் தாராபுரம் தாலுகாவிலுள்ள குடிமங்கலம் ஒன்றியம் அரசூர் பகுதியில் துவங்குகிறது. ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த ஆற்றுக்கான உப்பாறு அணை பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.