உபநயனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து சமயத்தில் ஒரு சில பிரிவினர் தம் சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் விழா உபநயனம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் வாழ்வின் இரகசியம் என கருதும் காயத்திரி மந்திரத்தை அவனது தந்தை, தாயின் முன்னிலையில், ஓதி கற்றுக்கொடுக்கிறார். இது பிரம்மோபதேசம் என வழங்கப்படுகிறது.
இவ்வாறு உபநயனம் செய்விக்கப்பட்ட சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்படுகிறான். நாளும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் என கதிரவனுக்கு அதிகாலை,காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு செய்து காயத்திரி மந்திரம் செபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறான்.[1]
மனுச்சட்ட ஆட்சி முறையின் சாதிய வெளிப்பாடாக இச்சடங்குகளை கருதுவோரும் எதிர்ப்பாரும் உளர்.[2]